கீழ்வேளூர், அக்.16: கீழ்வேளூரை அடுத்த தேவூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா, மரக்கன்று நடும் விழா, தேசிய கைகழுவும் தின விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விவேகானந்தன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் மஞ்சுளா, உதயசங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். விழாவில் பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும், அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு வீடு, பள்ளி, குடியிருக்கும் பகுதியில் மரகன்று நடுவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து தேசிய கைகழுபும் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் கை கழுவுவதன் அவசியம் குறித்து கைகளை கழுவி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் கைகளை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.நிகழ்ச்சியில் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் சதீஸ்குமார், ஜினியர் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சோபனா, தேசிய பசுமைப்படை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர் ராவனேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.